மட்டக்களப்பில் அமைச்சர் இராதாகிருஷ்ணன் வாகனங்கள் ஒ‪ன்றுடன் ஒன்று மோதி விபத்து


கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனங்கள் இரண்டும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் விபத்து சம்பவித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை 20.06.2017 மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த அமைச்சர் மைலம்பாவெளியிலுள்ள கோயிலொன்றுக்குச் சென்று வழிபட்டுவிட்டு கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை வழியாக மீண்டும் மட்டக்களப்பு நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கையில் அவர் பயணம் செய்த வாகனமும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு வாகனங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளது.


ஆயினும், அதிருஷ்ட வசமாக அமைச்சருக்கோ அல்லது வாகனங்களில் பயணம் செய்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கோ எதுவித காயங்களும் ஏற்படவில்லை.

பாதுகாப்பாக வாகனத்திலிருந்து இறக்கப்பட்ட அமைச்சர் உதவிக்கு விரைந்த மற்றொரு வாகனத்தில் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.