நாட்டில் அதிகரிக்கும் மழை

நாட்டின் தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தென் மேற்கு மாகாணத்தில் நாளை அதிகரிக்க கூடும்.

மேற்கு சப்ரகமுவ மத்திய மாகாணங்களிலும் மற்றும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமேற்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஓரளவுக்கு மழை பெய்யக்கூடும் .

ஊவா மாகாணம் ,அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஓரளவு கடும் காற்று வீசக்கூடும். இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.