புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் வருடாந்த சடங்கு உற்சவம்


(  சிவகுமார் )
கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் வருடாந்த சடங்கு உற்சவம் ஞாயிற்றுக்கிழமை 18ஆம் திகதி( இரவு 7.00 மணிக்கு) திருக்கதவு திறத்தலுடன் அம்பாள் எழுந்தருளப்பண்ணப்பட்டு பூசைகள் சிறப்புற நடைபெற்றது.

கல்யாணக்கால் வெட்டும் வைபவம் 21ஆம் திகதி புதன்கிழமை வீதிவலமாக இடம்பெறுவதுடன், அம்பாளின் விசேட வைபவமான தீமிதிப்பு வைபவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.