செங்கலடி விவேகானந்தா வித்தியாலய மாணவி புத்தாக்கத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

செங்கலடி விவேகானந்தா வித்தியாலய மாணவி புத்தாக்கத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவு


இலங்கை புத்தாக்குனர் கழகத்தினரால் நடத்தப்படும் 'சஹஸக் நிமவும்- 2017'  தேசிய புத்தாக்க போட்டியில் பாடசாலை பிரிவில் செங்கலடி விவேகானந்தா வித்தியாலய மாணவி  செல்வி புவனேசராசா நகுமியினால் செய்யப்பட்ட புத்தாக்கமான 'தேங்காய் துருவும் இயந்திரம்' மட்டக்களப்பு மகாஐன கல்லூரியில் நடாத்தப்பட்ட பிராந்திய மட்ட போட்டியில் இருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். இம்மாணவியை தயார்படுத்திய அதிபர், மற்றும் ஆசிரியையையும் பாடசாலை சமூகம் பாராட்டுகிறது.

இம்மாணவி கடந்த வருடத்தில் நடைபெற்ற போட்டியிலும் தேசிய மட்டத்தில் வெள்ளிப்பதக்கத்தினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.