உதவும் கரங்கள் அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வவுணதீவு  பிரதேசத்திலுள்ள இருநூறுவில் துர்க்கா பாலர் பாடசாலை மற்றும் இருநூறுவில் அதக பாடசாலையிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு உதவும் கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள்   அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.

பிரான்ஸ் தமிழ் மக்கள் உதவும் அமைப்பின் நிதியுதவியுடன், கடந்த கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வறுமை நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இவ் உதவி அளிக்கப்பட்டது.


உதவும் கரங்கள் அமைப்பின் பிரதிநிதி கே.லோகிதகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைப்பின் பிரதிநிதிகளான எஸ்.மகேந்திரநாதன், ஏ.மனோகரன், எஸ்.சுபகணேஸ் போன்றோர் வருகைதந்து மாணவர்களுக்கு இவ்வுதவியினை வழங்கிவைத்தனர்.

 இதன்போது, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.