சவூதி இளவரசர் இலங்கை விஜயம்

சவூதி அரேபியாவின் முன்னணி முதலீட்டாளரும் இளவரசருமான பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (21 ஆம் திகதி) இலங்கைக்கு வருகை தருகின்றார்.

இலங்கைக்கு வருகைதரும் இளவரசர் அல் சவூத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட முக்கிய அமைச்சர்கள் பலரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டுள்ளார்.

இலங்கையில் முதலீடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்காக வருகை தரும் இளவரசர் அல் சவூத் இவ்விஜயத்தின் போது கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்ய உள்ளார்.