க.பொ.த.( உயர்தர) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வகுப்புக்களுக்கு தடை

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தர பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­க­ளுக்­கான மேல­திக வகுப்­புக்கள் மற்றும் கருத்­த­ரங்­கு­களை எதிர்­வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் நடத்­து­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பரீட்சை திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

குறித்த உத்­த­ரவை மீறி வகுப்­பு­களை நடத்­துவோர் தொடர்பில் முறைப்­பா­டுகள் கிடைக்கும் பட்­சத்தில் அவர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்­ப­கு­மார தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் வெளியிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வ­றிக்­கையில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கல்விப் பொதுத் தரா­தர உயர்­தர பரீட்சை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை 2230 பரீட்சை நிலை­யங்­களில் நடை­பெ­ற­உள்­ளது.

இந்­நி­லையில் குறித்த பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­களை இலக்கு வைத்து நடத்­தப்­படும் மேல­திக வகுப்­புக்கள் மற்றும் கருத்­த­ரங்­கு­களை எதிர்­வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி நள்­ளி­ரவு முதல் நடத்­து­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பரீட்சை தொடர்­பி­லான மாதிரி வினாத்­தாள்­களை அச்­சிடல், அவற்றை விநி­யோ­கித்தல், மாதிரி வினாத்­தாள்­களை வழங்­கு­வ­தாக பதா­கைகள் ஒட்­டு­வது, துண்டுப் பிரசுரங்­களை விநி­யோ­கித்தல், அல்­லது அச்சு ஊட­கங்கள் மூலம் பிர­சாரம் செய்தல் உள்­ளிட்ட செயற்­பா­டு­க­ளுக்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த உத்­த­ரவை மீறி வகுப்­பு­களை நடத்தும் தனி­நபர் அல்­லது நிறு­வ­ன­மொன்­றுக்கு எதி­ராக பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் 1911 என்ற இலக்­கத்­துக்கோ அல்­லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலை­யத்­துக்கோ தொடர்பு கொண்டு அறி­விக்க முடியும். முறைப்­பா­டுகள் தொடர்பில் ஆராய்ந்து அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இம்­முறை குறித்த பரீட்­சைக்கு  3 லட்­சத்து 15 ஆயி­ரத்து 27 பரீட்­சார்த்­தி­கள் தோற்­று­வ­தற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 943 பாடசாலை பரீட்சார்த்திகளும் 77 ஆயிரத்து 284 தனிப்பட்ட விண்ணப்பதாரிகளும் தோற்றுவதற்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.