குடிவரவு குடியகல்வு சட்ட விதி முறைகளை மீறிய 27 இந்தியர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உளவு மற்றும் விசாரணை பிரிவினரால் இந்த கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 27 பேரில் விஞ்ஞானமாணி பட்டதாரி ஒருவரும் உள்ளடங்குவதாக அறிய முடிகின்றது.
குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் ஜோதிடம் பார்ப்பவர்களாகவும் 8 பேர் வர்த்தக நடவடிக்கைகளில் அல்லது வர்த்தக நிலையங்களில் சேவையாற்றியோரும் அடங்குவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறிப்பாக வடக்கு, கிழக்கில் இவ்வாறு இந்தியர்கள் தொடர்ந்து குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வர்த்தகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்கியுள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 27 இந்தியர்களையும் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் ஜோதிடம் பார்ப்பவர்களாகவும் 8 பேர் வர்த்தக நடவடிக்கைகளில் அல்லது வர்த்தக நிலையங்களில் சேவையாற்றியோரும் அடங்குவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறிப்பாக வடக்கு, கிழக்கில் இவ்வாறு இந்தியர்கள் தொடர்ந்து குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி வர்த்தகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்கியுள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 27 இந்தியர்களையும் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.