சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் 42 வது பிறந்த தினத்தை சிறப்பித்து பேத்தாழை இளைஞர்களினால் பலதரப்பட்ட நிகழ்வுகள் ஏற்பாடு

கிழக்கு மாகாண முதல் முதலமைச்சரும்,  தற்போதய கிழக்கு மாகாண உறுப்பினருமாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்  சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் 42 வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக இன்று (18.08.2017) பேத்தாழை இளைஞர்களினால் பலதரப்பட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று காலை பேத்தாழை மகா விஸ்ணு ஆலயத்தில் விஷேட பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டதோடு கல்குடா பிரதான வீதியில் அலங்காரப் பந்தல் அமைத்து முன்னாள் முதலமைச்சரின் பிறந்தநாளுக்கான கேக் வெட்டப்பட்டு பாற்சோறுஇ குளிர்பானம் என்பனவும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்குமாகாண சபை உறுப்பினரும்இ தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித்தலைவருமான கெளரவ நா.திரவியம்இ  முன்னாள் முதலமைச்சரின் பெற்றோர், பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள், கிராம நலன் விரும்பிகள், கட்சித் தொண்டர்கள்,
மற்றும் பொதுமக்கள் என பலரும் கந்து கொண்டு சிறப்பித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.