மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை குச்சவௌி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து புல்மோட்டை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தூணொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் குச்சவௌி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குச்சவௌி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.