செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தான பாற்குடபவனி நிகழ்வு


(சுபஜன் , டினேஸ்)
செங்கலடி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தான பாற்குடபவனி நிகழ்வு இன்று (11) இடம்பெற்றது.
ரமேஸ்புரத்தில் அமைந்து நல்லருள்புரியும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தான 29வது வருடாந்த அலங்கார உற்சவமானது 08.08.2017 அன்று ஆரம்பமாகியது.

தொடர்ந்து உற்சவம் இடம்பெற்று எதிர்வரும் வியாழக்கிழமை 17.08.2017 சவுக்கடி இந்துமா சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் மற்றும் ஆலயத்தில் இறுதி நாள் விசேட பூஜைகளுடன் இனிதே நிறைவுபெறவுள்ளது.

இன்று 4ம் நாளினை சிறப்பிக்கும் முகமாக இன்று பாற்குடபவனி நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. கொம்மாதுறை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை வந்தடைந்ததும் அபிஷேகம், பூஜை என்பனவும் இடம்பெற்றது.