நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மொழி!

மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம், தேசிய பிரச்சினைக்கு ஓரளவு முடிவு கட்டலாம் என சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடநெறியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து குறித்த நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய, இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நாட்டின் அபிவிருத்தி ஆகியவற்றில் தமிழ் மொழி கற்பது காலத்தின் தேவையாக உள்ளது என்றார்.