(சித்தா)
கிழக்கு மாகாண 'சிறு கைத்தொழில்' திணைக்களத்தினால் 'மலரும் கிழக்கு' எனும் தொனிப்பொருளில் நடைபெறும் (10.09.2017 -12.09.2017) கண்காட்சிக்காக கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் மட் / பட் / களுதாவளை மகாவித்தியாலயத்தில் தரம் 13 (Bio Technology) பிரிவில் கல்விகற்கும் களுவாஞ்சிகுடி சக்கடத்தார் வீதியில் வசிக்கும் திவ்வியராஜ் அதிரா 1ம் இடம் பெற்றுள்ளார். இம் மாணவியினை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு 10.09.2017 அன்று அம்பாறையில் சிறு கைத்தொழில் திணைக்களத்தில் நடைபெற்றபோது இவருக்கான பரிசினை கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ ரோஹித போகல்லாகம அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.