மீன்வாடி ஒன்று தீயில் எரிந்து நாசம்

(கதிரவன்)

திருகோணமலை அலஸ்தோட்டம் கடற்கரை பிரதேசத்தில் மீன்வாடி ஒன்று செவ்வாய்கிழமை 2019.09.12 இரவு தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.

லவ்லேன் பகுதியைச் சேர்ந்த முகமது அஜ்மல் என்பவருக்கு சொந்தமான வாடியே இவ்வாறு எரிந்துள்ளதாக திருகோணமலை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் பதின்நான்கு இலட்சம் பெறுமதியான மீன்பிடி உகரணங்கள் தீயில் எரிந்துள்ளது.

இச்சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி திருகோணமலை தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை அன்றைய தினம் 2017.09.12 பகல் 11.30 மணியளவில் புல்மோட்டை வீதியில் அலஸ்தோட்டம் பிரதான வீதியில் தனியாருக்கு சொந்தமான உணவுச்சாலை தீயில் எரிந்து முற்றாக நாசமாகி உள்ளது.