ஏறாவூர், தேவாபுரம் ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து ரயிலில் மோதி படுகாயமடைந்து, கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளரான தம்பிராசா சிவநேசன் (வயது 60) என்பவர், சிகிச்சை பயனின்றி, நேற்று (20) பிற்பகல் மரணமடைந்துள்ளாரென, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 9ஆம் திகதி, பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றி வந்து கொண்டிருந்த ரயிலுடன், குறித்த நபர் ஓட்டிச் சென்ற படி ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது.
கடந்த 9ஆம் திகதி, பொலன்னறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றி வந்து கொண்டிருந்த ரயிலுடன், குறித்த நபர் ஓட்டிச் சென்ற படி ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது.