விபத்தில் வயோதிபர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை மயிலம்பாவெளியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மோட்டார் சைக்கிளுடன் சைக்கிள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் மயிலம்பாவெளி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியரான இம்மானுவெல் சந்திரகுமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த இம்மானுவெல் சந்திரகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.