புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கேதார கௌரி விரத காப்பு கட்டும் நிகழ்வு

(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் கேதார ஈஸ்வர கௌரி விரதத்தின் இறுதி நாள் காப்பு கட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 30ம் திகதி ஆரம்பமான கேதார ஈஸ்வர கௌரி விரதம்  வியாழக்கிழமை காப்பு கட்டுதலுடன் விரதம் முடிவடைகின்றது. ஆலயத்தில் வசந்த மண்டப பூசை, சுவாமி உள் வீதி வலம் வருதல்,  கேதார ஈஸ்வர கௌரி விரத பூசைகள் என்பன இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களுடைய வேண்டுதலை வேண்டி கௌரி காப்பினை கட்டினார்கள்.

ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ.எஸ்.பிரணவசர்மா குருக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரால் கேதார விரத காப்பு வழங்கி வைக்கப்பட்டதுடன், பூசைகளும் இடம்பெற்றது.