கள்ளத்தனமாக மாடு கொண்டு வந்தவர்கள் மண்முனைப் பாலத்தில் பிடிபட்டு தப்பி ஓட்டம்


15.10.2017 இன்று  இரவு 8.30 மணி வேளையில் படுவான்கரைப் பிரதேசத்தில் இருந்து இரண்டு மாடுகளைக் சாய்த்துக் கொண்டு வந்த இனந்தெரியாத மூன்று பேர் மண்முனைப் பாலத்தில் வைத்து தாழங்குடா இளைஞர்களால் விசாரிக்கப் பட்ட போது மாடுகளை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

கயிற்றினால் பிணைக்கப்பட்ட இரு மாடுகளை இரண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பேர் சாய்த்துக் கொண்டு வரும் வேளையிலேயே இவ்வாறு பிடிபட்டுள்ளனர். இளைஞர்களின் விசாரணையை அடுத்து தப்பி ஓடியுள்ளனர். இவர்களைப் பற்றிய விபரம் ஏதும் அறியாத வேளையில். காத்தான்குடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாடுகள் தாழங்குடா இளைஞர்களின் பாதுகாப்பில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.