மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கனிஸ்ட தேசிய மாணவர் படையணியினை சேர்ந்த மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

(க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கனிஸ்ட தேசிய மாணவர் படையணியினை சேர்ந்த 23 மாணவர்கள் ரன்தம்பேயில் விஷேட பயிற்ச்சியை கடந்தவாரம்  முடித்திருந்தார்கள். இவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டு சான்றீதழ்களும், (16.10.2017)திங்கட்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில்  வழங்கிவைக்கப்பட்டது.

தேசிய மாணவர் படையணி பொறுப்பாசிரியர் கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற போது அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சின்னம் சூட்டப்பட்டு,சான்றீதழ்களும் வழங்கி வைத்தார்கள்.