கல்குடா வலயத்தில்புலமைப் பரிசில் பரீட்சையின் வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

 (ஜெ.ஜெய்ஷிகன்)
கல்குடா வலயத்தில்  2017ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வெற்றியாளர்கள் மற்றும்  வெற்றிக்கு காரணமாக இருந்து சேவையினை அர்ப்பணித்த ஆசிரியர்கள் ,  அதிபர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 16.10.2017,  திங்கட்கிழமையன்று கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிரான் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

 கல்குடா கல்வி வலயத்தின்  பணிப்பாளர் தினகரன் ரவி  தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், திருமதி.சாமினி ரவிராஜ், த.அனந்தரூபன், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான நா.குணலிங்கம், எஸ்.சிவகுரு, ச.பரமேஸ்வரன்,  அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.இந்நிகழ்விற்கான அனுசரணையினை  கல்குடா வலயத்திற்குட்பட்ட இந்து ஆலயங்கள் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.