ஹஸன் அலியின் சகோதரர் பயணித்த வாகனம் விபத்து! நால்வர் வைத்தியசாலையில்

(எப்.முபாரக்)

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் காரும் பஸ்சும் மோதியதில் இருவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காரில் பயணித்த இருவரும் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் படுகாயமடைந்தவரை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று(11) இடம்பெற்றுள்ளது.  இவ்வாறு படுகாயமடைந்தவர் மு.காவின் முன்னால் செயலாளர் நாயகம் ஹஸன் அலி மற்றும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் ஆகியோரின் சகோதரரான நிந்தவூர் பகுதியைச்சேர்ந்த எம்.டி.ஜப்பார் அலி (57வயது) எனவும் தெரியவருகின்றது.

கிண்ணியாவிலிருந்து மூதூர் பயணித்த பஸ்சும் நிந்தவூரிலிருந்து வந்து கொண்டிருந்த காரும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம் பெற்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.