ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அமைப்பாளரை வரவேற்கும் நிகழ்வு


அதிமேதகு கௌரவ ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அமைப்பாளராக  மயில்வாகனம் சிறிதரன் அவர்கள் 12.10.2017 அன்று நியமிக்கப்பட்டார்.

இதனை முன்னிட்டு அவரின் சொந்த  ஊரான கன்னன்குடாவில் வரவேற்பு நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும் அவ்வூர் மக்களால் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வின்போது ஊர் பிரமுகர்கள் சிலரால் வாழ்த்துரைகளும் அமைப்பாளர்  ம. சிறிதரன் அவர்களால் ஏற்புரையும் வழங்கப்பட்டது.

அமைப்பாளரான இவர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய தமிழ் இளைஞர் அணிக்கான தேசிய அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.