ஊடகவியலாளர் எப்.பாஸூல் பர்ஹான் காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் ஊடக ஒளி பட்டம் வழங்கி கௌரவிப்பு

காலம் சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் ஏ.எல்.பழுலுல்லாஹ்வின் மூன்றாவது மகன் ஊடகவியலாளர் எப்.பாஸூல் பர்ஹான் ஊடகத்துறை வளர்ச்சிக்கு ஆற்றிக்கொண்டிருக்கும் பங்களிப்பை பாராட்டி காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் ஊடக ஒளி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.




இவருக்கான கௌரவிப்பு நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கலாசார அதிகார சபை,கலாசார பேரவை என்பவற்றினால் கடந்த திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயகுமார் உதயஸ்ரீதர் தலைமையில் நடாத்தப்பட்ட 2017 பிரதேச கலை இலக்கிய விழாவின் போது காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கரினால் பொன்னாடை போர்த்தப்பட்டு,சான்றிதழும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2017 காத்தான்குடி பிரதேச கலை இலக்கிய விழாவில் கௌரவிக்கபட்ட நான்கு கலைஞர்களில் ஊடகத்துறை சார்பாக ஊடகவியலாளர் பழுலுல்லாஹ் பாஸூல் பர்ஹான் ஊடக ஒளி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.