பரீட்சைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பதவி நீக்கம்!

பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசிய மற்றும் நிறுவன பரீட்சை பிரிவு பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பரீட்சை ஆணையாளர் நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடமை துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் என்பன தொடர்பிலேயே இவர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சியினால், இராஜாங்க சேவையின் கல்விச் சேவை குழுவின் அனுமதியின் பேரிலேயே இவர் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.