மட்டக்களப்பு தாழங்குடாவில் சுனாமி பதட்ட நிலையில் ஏற்பட்ட கார் மோட்டார் சைக்கிள் விபத்து


(சசி)
மட்டக்களப்பு தாழங்குடாப் பிரதேசத்தில் மட்டக்களப்பு கல்முனைப் பிரதான வீதியில் 2017.11.15 புதன் கிழமை மதியம் 12.15 நேரமளவில் வாகன விபத்து ஏற்பட்டது. அநுராதபுரத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த கார் கிரான்குளத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் வண்டியுடன் நேர் எதிராக மோதியதில் இவ் விபத்து நடந்துள்ளதுடன். இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிரான்குளத்தினைச் சேர்ந்த கண்ணதாசன் (வயது 47) என்பவர் காயங்களுடன் ஆரையம்பதி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார் எரங்க வதுகே  எனும் சிங்கள நபருக்கு சொந்தமானதுடன் காரினைந் செலுத்தியவர் தான் தனியாகப் பயணிக்கும் போது வாகன நெரிசல் மற்றும் தனக்கு வந்த செய்திகள் மூலம் பதட்ட நிலையில் இவ் விபத்து ஏற்பட்டதாக கூறினார். இவ் விபத்து தொடர்பாக காத்தான்குடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.