(சரவணன், செ.துஜியந்தன் ) மதுபோதையில் வீதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரில் ஒருவர்
வீதியில் வீழ்ந்தபோது அவர் மேல் முச்சக்கரவண்டி மோதியதில் சம்பவ இடத்தில்
உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு காத்தான்குடி
பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது
இதில் இருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
புதுக்குடியிருப்பு பிரதேத்தைச் சோர்ந்த 54 வயதுடைய முத்துதம்பி துரைராஜசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது குறித்த பகுதியில் உள்ள மதுபானசாலையில் உயிரிழந்தவர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரும் வேவ்வேறாக சம்பவதினமான இரவு 8.00 மணியளவில் மது அருந்த சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இருவருக்கம் இடையிலே வாய்தர்கம் இடம்பெற்றுள்ளது இதனையடுத்து உயிரிழந்தவர் மதுபானசாலையில் இருந்து வெளியேறி கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியான புதுக்கடியிருப்பு பகுதியில் வீதியில் சோளம் விற்பனை நிலையத்துக்கு அருகில் நின்றிருந்த போது அங்கு வந்த மதுபானசாலையில் சண்டையிட்டவர் ஆகிய இருவருக்கமிடையே வாய்;தர்கம் முற்றிய நிலையில் உயிரிழந்தவரை தள்ளி விட்போது அவர் மட்டக்களப்பை நோக்கி வீதியால் சென்ற ஆட்டோமீது மோதி கிழே வீழ்ந்;ததில் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்தவரை தள்ளிவிட்ட புதுக்கடியிருப்பை சேர்ந்த 35 வயதுடையவரையும் ஆட்டோ சாரதியையும் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
இதில் இருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்
புதுக்குடியிருப்பு பிரதேத்தைச் சோர்ந்த 54 வயதுடைய முத்துதம்பி துரைராஜசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது குறித்த பகுதியில் உள்ள மதுபானசாலையில் உயிரிழந்தவர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ஒருவரும் வேவ்வேறாக சம்பவதினமான இரவு 8.00 மணியளவில் மது அருந்த சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இருவருக்கம் இடையிலே வாய்தர்கம் இடம்பெற்றுள்ளது இதனையடுத்து உயிரிழந்தவர் மதுபானசாலையில் இருந்து வெளியேறி கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியான புதுக்கடியிருப்பு பகுதியில் வீதியில் சோளம் விற்பனை நிலையத்துக்கு அருகில் நின்றிருந்த போது அங்கு வந்த மதுபானசாலையில் சண்டையிட்டவர் ஆகிய இருவருக்கமிடையே வாய்;தர்கம் முற்றிய நிலையில் உயிரிழந்தவரை தள்ளி விட்போது அவர் மட்டக்களப்பை நோக்கி வீதியால் சென்ற ஆட்டோமீது மோதி கிழே வீழ்ந்;ததில் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்தவரை தள்ளிவிட்ட புதுக்கடியிருப்பை சேர்ந்த 35 வயதுடையவரையும் ஆட்டோ சாரதியையும் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது பொலிசார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்