புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகம்!

டிஜிட்டல் தொழிநுட்பத்திலான தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணியில் இதுவரை 75 ஆயிரம் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அடையாள அட்டையைப் பெற்று கொள்வது தொடர்பில் மக்கள் ஆர்வத்துடன் இருப்பதாகவும், நாளாந்தம் சுமார் 1500 பேருக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், 15 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விண்ணப்பிப்போரும், தமது தேசிய அடையாள அட்டை சிதைவடைந்த அல்லது காணாமல் போனோர்இந்த ஸ்மாட் தேசிய அடையாள அட்டையைப் பெற்று கொள்ளமுடியும்.

குறித்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.