சட்டவிரோதமாக மாடுகளை கடத்தியவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோதமாக மாடுகளை கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (புதன்கிழமை)  குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் அவர் கொண்டு சென்ற ஏழு மாடுகள் மற்றும் கன்டர் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மாடுகள் காணாமல் போவதாக பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் குழுவினரின் உதவியுடன் மேற்படி வாகனம் மடக்கி பிடிக்கப்பட்டது.

குறித்த மாடுகள் கொள்ளையிடப்பட்டதா அல்லது விற்பனை செய்யப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.