'Blooming Buds' முன்பள்ளி நிலையத்தில் பெற்றோர் தின நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும்

மட்டக்களப்பு, பார்வீதி 'Blooming Buds' முன்பள்ளி நிலையத்தில் பெற்றோர் தின நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் புதன்கிழமை 6ஆம் திகதி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.



Blooming Buds முன்பள்ளி நிலையத்தின் அதிபர் திருமதி சி.தேவநம்பி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  அருட்தந்தை நவரெட்ணம் நவாஜி, டாக்டர் சி.சி.இன்பதுரை போன்றோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு நம்பிக்கையானவர்களாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை தாய் தந்தையர்கள் சிதைத்துவிடாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். என அருட்தந்தை நவரெட்ணம் நவாஜி தெரிவித்தார்.

பெற்றோர் தின பரிசளிப்பு  நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில், பிள்ளைகள் திறமைவாய்ந்தவர்கள். ஒவ்வொரு பிள்ளையும் தனித்துவமானவர்கள் அவர்களை நல்வழியில் கொண்டுவருவதற்கான பெரும் பங்கு தாய் தந்தையருக்கே உள்ளது.

பெற்றோருக்கு விலை மதிக்க முடியாத சொத்தும், உயர்ந்த செல்வமும் அவர்களது பிள்ளைகள்தான் என்பதை பொற்றோர்கள் ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டும்.

சில பெற்றோர் அவர்களது குழந்தைகளை வேறு குழந்தைகளுடன் ஒப்பீடு செய்து பேசுவதும் உண்டு, அவ்வாறான செயற்பாடானது அவர்களின் எதிர்காலத்தை மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். குழந்தைகள், சிறுவர்கள் என்பவர்கள் எப்போதும் தனித்துவமானவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்துவமான திறமை படைத்தவர்கள். என தெரிவித்தார்.


இந் நிகழ்வில் மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் கலை நிகழ்வுகளும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.