தங்களுக்குள்ளே ஒரு நிருவாகத்தை பகிர்ந்து கொள்ள முடியாதவர் தமிழர்களுக்குரிய உரிமைகளை எவ்வாறு பெற்றுக் கொடுக்கப்போகிறார்கள் - Tmvp செயலாளர் பூ.பிரசாந்தன்

(வரதன்)எதிர்வரும் உள்@ராட்சிச் சபைத் தேர்தல் மக்கள் ஆணைகளைப் பெற்று போலி முகங்களில் இருக்கின்ற அரசியல்த் தலைமைகளுக்கு மக்கள் ஒரு பாடத்தைப் புகட்டுவார்கள்.என்ற நம்பிக்கை எமக்குண்டு தங்களுக்குள்ளே ஒரு ஜனநாயகத்தை கடைப்பிடிக்கமுடியாமல்  நிருவாகத்தை பகிர்ந்து கொள்ள முடியாதவர்கள் கிழக்க மாகாணத்தில் தமிழர்களுக்குரிய உரிமைகளை எவ்வாறு பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள்

 ஜனநாயக ரீதியில் பங்கீடுகளை இவர்களால் எவ்வாறு பெறுவார்கள் இவ்வளவு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் சர்வதேச விசாரணை போர்க்குற்ற விசாரணை என்று எதுவுமில்லாமல் பொம்மைகளாக தலையாட்டி இருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு உரிமைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப் போகிறார்கள்

உலக நாடுகளட வந்து தீர்வு தருவதாகவும் பொய் கூறி மக்களை ஏமாற்றப் பார்;க்கிறார்கள் கடந்த காலங்களில் உள்@ராட்சி சபைகளில் எமது திறமைகளை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டள்ளனரென
 இடம்பெறவுள்ளஉள்@ராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இன்று நண்பகல் ஏறாவூர்ப் பற்று பிரதேசசபைக்கான(செங்கலடி) வேட்புமனுவை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின்பு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் Tmvpகட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். கட்சியின் அங்கத்தவர்கள் வேட்பாளர்கள பலரும் கலந்து கொண்டனர்