மண்டூர் இராகிருஷ்ண வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களுக்கு முறையாக வகுப்புகள் ஆரம்பம்.

(சித்தா)
2018 ஆம் வருடத்தில் தரம் ஒன்று மாணவர்களுக்காக முறையாக வகுப்புகளை ஆரம்பிக்கும் நிகழ்வு அதிபர் செல்வி வ. ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. தேசியக் கொடி, பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதம், பாடசாலைக் கீதம் இசைக்ப்பட்டு சமயப் பிரார்தனையுடன் தரம் 2 மாணவர்களால் சம்பிரதாய பூர்வமாக தரம் 1 மாணவர்களை இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பா.வரதராஜன், வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க, மண்டூர் மெதஸ்டித மிசன் அருட் சகோதரி பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.கு.ஜதீஸ்குமார் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து மாணவர்களை வரவேற்பதில் தங்களது வெளிப்பாட்டினர் வெளிப்டுத்தினர். ஆரம்பக் கல்வி மாணவர்களினால் கலை நிகழ்வுகளும் இடம் பெற்று முறையான வகுப்பினை ஆரம்பித்து வைத்தனர் .