தேர்தல் கண்காணிப்பில் 7,000 பேர்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு  நடவடிக்கைகளுக்காக 7,000 பேர் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் நாடளாவிய ரீதியில் இவர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


அத்துடன் எதிர்வரும் 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்கு பதிவு  தினத்தன்று ஆயிரம்  பேர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.