வடக்கு கிழக்கு பரீட்சை மேலதிக மேற்பார்வையாளர்களுக்கான கொடுப்பனவை துரிதப்படுத்துமாறு கோரிக்கை.

( ரவிப்ரியா  )
2017ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு மேலதிக மேற்பார்வையாளர்களர்கள் முதற் தடவையாக நியமிக்கப்படடனர். பரீட்சை
சீராகவும் சுமூகமாகவம், நேர்மையாகவும் நடைபெறுவதற்கு அவர்களின் பங்களிப்பு பாராட்டும்படி இருந்தது.

வடக்கு, கிழக்கில் மேற்படி கடமையாற்றியவர்களுக்கான கொடுப்பனவு இன்னமும் தங்களுக்கு கிடைக்காதது குறித்து சம்பந்தப்பட்டோர் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்கின்றனர்.

எனினும் பரீட்சை மேலதிக மேற்பார்வையாளர்கள் தவிர்த்து ஏனைய சகல தரத்தினருக்கும் கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப் பட்டுவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டும் பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
ஓகஸ்ட் மாதத்தில் நடந்து முடிந்த பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகிய பின்னரும் கூட தங்களுக்கான கொடுப்பனவு தாமதமாவத்திற்கு என்ன காரணம் என வினவுகின்றார்கள்.

பரீட்சை செவ்வனே நடந்தேற பாரிய பங்களிப்புச் செய்த தங்கள் கொடுப்பனவின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்தும் பாராமுகமாக இருக்காமல் தங்கள் கொடுப்பனவை பெற்றுக்கொள்வதற்கு சம்பந்தப்படட அதிகாரிகள் துரித நடவடிககை எடுக்க வெண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.