வவுணதீவு இலுப்படிச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிலில், அம்பாறைக்கு கடமைக்காக சென்றவேளையில் மண்டூர் வீதியில் வைத்து பஸ்வண்டியை முந்திச் செல்ல முற்படுகையில் இடம்பெற்ற விபத்தில் இவர் ஸ்தலத்திலே பலியானார்.
மட்டக்களப்பில் வாகன விபத்தில் ஒரு வயதுக் குழந்தையின் தந்தை பலி
மட்டக்களப்பு - மண்டூர் பொலிஸ் பிரிவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார்
மதுவரித் திணைக்களத்தில் கடமைபுரியும் ஒரு வயதுக் குழந்தையின் தந்தையான கிருஸ்ணப்பிள்ளை வாசன் என்பவரே இவ் விபத்தில் பலியானார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், குறித்த விபத்துத் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.