துறைநீலாவணையினைச் சேர்ந்த சாமித்தம்பி கருணாநிதி அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.


மட்டக்களப்புத் துறைநீலாவணையினைச் சேர்ந்த சாமித்தம்பி கருணாநிதி (ஆசிரியர்) அகில இலங்கை சமாதான நீதவானாக அண்மையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி மா.கணேசராசா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
 துறைநீலாவணையினைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  இவர் துறைநீலாவணை முத்து மாரியம்மன் ஆலயத்தின் செயலாளராகவும் அதே போன்று  பல பொது அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றார்.
மட்டக்களப்புத் தேசியக்கல்விக்கல்லூரியில் கற்று ஆசிரியராக மண்டூர் மகாவித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று தற்போது பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.