அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது.

(எப்.முபாரக்)   

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனமொன்றில்  மணல் ஏற்றிச் சென்ற இருவரை நேற்றிரவு (20) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                                   

கந்தளாய், ரஜஎல பகுதியைச் சேர்ந்த 22, மற்றும் 34 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                                             

குறித்த சந்தேக நபர்கள் அனுமதிப்பத்திரமின்றி கந்தளாயில் இருந்து வான்எல பகுதிக்கு கொண்டு சென்ற போது கந்தளாய் போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                         

சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்துள்ளதோடு இன்று (21) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும்,சந்தேக நபர்கள் பயன்படுத்திய டிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.