மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஆங்கில நாடக விழா

(வசந்த் )
 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஆங்கில நாடக விழா மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் ஆங்கில நாடக விழா இன்று(10) சனிக்கிழமை குறிஞ்சாமுனை பாடசாலை மண்டபத்தில் ஆரம்பமானது. பிராந்திய ஆங்கில ஆதரவு மையமும், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகமும் இணைந்து, வலய வரலாற்றில் முதன்முறையாக இந்நாடாக விழாவினை ஆற்றுகை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஆரம்ப நிகழ்வில், வலய அதிகாரிகளும், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். குறித்த நாடகவிழா நாளைய தினமும் காலை 09.30 மணி தொடக்கம் 12.30மணி வரை நடைபெறவுள்ளது. இதன்போதுவலயத்திற்குட்பட்ட பல்வேறு பாடசாலைகளின் பல நாடகங்களும் ஆற்றுகை செய்யப்படவுள்ளன.