முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு?

முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கான உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ளமையால், பொதுமக்களுக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக, இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் தேசிய சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டித் தொழிலைப் பாதுகாத்துத் தருமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், மீண்டுமொருமுறை வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.