நுண்திறனுடன் கூடிய இரண்டாம் நிலைக் கல்வியினால் வேலைவாய்ப்பு அதிகம் : மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம். உதயகுமார்

(சிவம்)

ஆங்கில அறிவுடன் கூடிய தகவல் தொடர்பாடல் கல்வி உள்ளிட்ட நுண்திறனுடன் கூடிய இரண்டாம் நிலைக் கல்வியினால் மாணவர்கள் தனியார் மற்றும் அரச சேவைகளில் தொழில் வாய்ப்பை பெறுவதனால் அரசு முகங்கொடுக்கும் பாரிய பிரச்சினையான இளைஞர்களிடத்தில் தொழில் இல்லா பிரச்சினையைத் தீர்க்க முடியம் என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

தொழில் வழிகாட்டல், சமூக தொழில்வாண்மை, வருத்தி மற்றும் வாசிகசாலை வசதிகள் என்பனவற்றை இலவசமாக வழங்கும் நோக்கோடு வினைத்திறன் பயிற்சி நிலையம் இன்று (28) கல்லடி சரவணா வீதியில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திறந்து வைக்கப்பட்டது.


நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ரெகசாமினி கிருஷhன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் மேலும் கூறுகையில்

மாணவர்கள் எல்லோருக்கும் பவ்கலைக்கழகம் செல்ல வாய்ப்புக் கிடைப்பதல்லை பெற்றோர் தொழில் சந்தைகளில் தொழில் தேடும் போது ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு ஏற்றாற் போல் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.


கொழும்பு போன்ற இடங்களில் உள்ளவாறு தற்போது மட்டக்களப்பிலும் இரண்டாம் நிலைக் கல்வியை வழங்கும் அக்டிவ் கல்வி நிலையம் திறக்கப்பட்டுள்ளது மாணவர்களின் தொழில் நுட்பக் கல்வியை வளப்படுத்தும் எனக் கூறினார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், சிறி லங்கா புக் பிரிட் நிiயைத்தைச் சேர்ந்த சாரதா சோமரத்தின, செரி லிம் மற்றும் மரியோ டீ அல்விஸ் மற்றும் மட்டக்களப்பு இளைஞர் அமைப்பைச் சேர்ந்த கிசோத் நவரட்ணராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.