குருமண்வெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

செ.துஜியந்தன்
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹோற்சவம் இன்று 22 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவடையவுள்ளது. இற்றைக்கு 17 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட குருமண்வெளி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின். கொடியேற்றப் பூசைகள் இன்று காலை 6.30 மணிக்கு விநாயகர்வழிபாடு, கும்பபூஜை ஆரம்பமாகி தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம் வருதல் ஆகியன நடைபெற்றன உற்சவ காலத்தில் 28 ஆம் திகதி வேட்டைத்திருவிழா, 29 ஆம் திகதி சப்புறத்திருவிழா, 31 ஆம் திகதி காலை 9மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 தினசரி காலை 6.00 மணிக்கும் மாலை 6மணிக்கும் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி இரவு 11 மணிவரை பூஜைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.