சித்திரைப் புத்தாண்டில் மட்டும் 8 இளைஞர்கள் பலி...! 375 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து 8 இடங்களில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய திருக்கோவில், பிடிகல, மெதிரிகிரிய, கிராதுருகோட்டை, வெலிகந்த, வலஸ்முல்ல, சூரியவேவ மற்றும் மொரகொடை பிரதேசங்களில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் ஆண்கள் என்பதுடன், அவர்களில் அதிகமானவர்கள் இளைஞர்கள் என காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த இரு தினங்களில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட காவற்துறை பரிசோதனைகளில் 375 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக காவற்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கவனக்குறைவாக வாகனத்தினை செலுத்திய 267 பேருக்கு எதிராகவும், அதிவேகமாக வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 602 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.