முச்சக்கரவண்டியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழப்பு ஐந்து பேருக்கு காயம்

திருகோணமலை – திரியாய பிரதான வீதியில் கோமரன்கடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியொன்றும், தனியார் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 68 வயதான பெண்ணொருவர் உயிரிழந்ததோடு, அதன் சாரதி உள்ளிட்ட 4 பேர் மற்றும் பேருந்தில் பயணித்த நபரொருவரும் காயமடைந்து கோமரன்கடவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.