பொத்துவில் தமிழ் இளைஞர்களின் தமிழ் புத்தாண்டு விழா

தமிழ் சிங்களப் புத்தாண்டு தினமான நேற்று பொத்துவில் தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் சித்திரைப் புத்தாண்டு விழா பொத்துவில் நகர ஆலையடிப் பிள்ளையார் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அவர்களும், பொத்துவில் பிரதி பொலிஸ் பரிசோதகரும், பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பொத்துவில் பிரதேச சபை பிரதி தவிசாளர் பார்த்தீபன் அவர்களும், கல்முனை இளைஞர் சேனை தலைவர், செயலாளர் உட்பட பல உறுப்பினர்கள் மற்றும் பொத்துவில் இளைஞர்கள்,யுவதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.