முதன்முறையாக தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு இலங்கையர் ஒருவர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி கெசட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த 24 நாட்களில் சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் 59 பேர் கைதாகியுள்ளனர்.
அவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 நாட்களாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது
அதன்படி 33 சவூதி நாட்டினை சேர்ந்தவர்கள் என்றும், 7 ஏமான், 2 எகிப்தியன், 2 அபிகானிஸ்தான், கென்னியா மற்றும் நைஜீரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த வருடத்தின் முதன் முறையாக இலங்கை நாட்டினை சேந்தவர் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 10 இந்திய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி கைது செய்யப்பட்ட இலங்கையரது தனிப்பட்ட விபரங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.
அதன்படி 33 சவூதி நாட்டினை சேர்ந்தவர்கள் என்றும், 7 ஏமான், 2 எகிப்தியன், 2 அபிகானிஸ்தான், கென்னியா மற்றும் நைஜீரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த வருடத்தின் முதன் முறையாக இலங்கை நாட்டினை சேந்தவர் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 10 இந்திய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி கைது செய்யப்பட்ட இலங்கையரது தனிப்பட்ட விபரங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.
சவுதியில் தேசிய பாதுகாப்பு தலைமையகத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.