துறைநீலாவணையில் கலாசார விளையாட்டு விழா நாளை


(சா.நடனசபேசன்)
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு துறைநீலாவணை இளைஞர் அமைப்பினரின் ஏற்பாட்டில் மாபெரும் கலாசாரவிளையாட்டு விழா அவ் அமைப்பின் தலைவர் அ.வேளராசு தலைமையில் சனிக்கிழமை  துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் பி.ப 2.30 மணிக்கு இடம்பெற இருக்கின்றது.

இதில் மரதன் ஓட்டம் காலை 7 மணிக்கும் தோணி ஓட்டம் காலை 9 மணிக்கும் இடம்பெற இருப்பதாக அதன் தலைவர் தெரிவித்தார் ஏனைய நிகழ்வுகள் யாவும் பி.ப.2.30 மணிக்கு இடம்பெறும்