மோட்டார் சைக்கிள் - வான் விபத்து: தாயும் மகளும் படுகாயம்

மட்டக்களப்பில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர்.
தனியார் வகுப்புக்கு மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த தாயும் மகளையும் வான் ஒன்று மோதியுள்ளது.  
இதன்போது படுகாயமடைந்த தாயும் மகளும் அங்கிருந்தவர்களினால் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்