தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் நினைவேந்தல் நிகழ்வு


முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அரசியற்கட்சிகள் இன்றைய தினம் நினைவுகூருகின்றன.

அவ்வகையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டிலும் இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கட்சியின் உப தலைவரும் மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜி.வசந்தராசா தலைமையில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர மன்னணியின் செயலாளர் வி.கமலதாஸ், மாநகரசபை உறுப்பினர் திலிப் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது கலந்து கொண்ட அனைவரும் முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவத்தில் உயிர்களை ஈந்த உறவுகளுக்கு சுடரேற்றி தங்கள் அஞ்சலியைச் செலுத்திமை குறிப்பிடத்தக்கது.