வாழைச்சேனையில் இளம் வயதுடைய ஆண்,பெண் இருவர் தூக்கிட்டு தற்கொலை!


வாளைச்சேனை - புனான்கட்டை பிரதேசத்தில் வன பகுதி ஒன்றில் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்கள் இளம் வயதுடையவர்கள் என்பதுடன் ஆண், பெண் இருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படாததுடன் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.