எரிபொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் கனரக வாகனங்களின் உதிரிப்பாகங்களின் விலை அதிகரிப்புக்கு மத்தியில் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அனைத்து இலங்கை கனரக போக்குவரத்து வாகன உரிமையாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கை கனிய எண்ணெய் தனியார் கொள்கலன் வாகன தாங்கி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.