சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் மாபெரும் இரத்த தான நிகழ்வு.

 சிவானந்தா விளையாட்டுக்கழக  மாபெரும் இரத்த தான நிகழ்வு.
மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக்கழகத்தினரால் சிவானந்தா வித்தியாலய பிரதான ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று காலை 9.௦௦ மணியளவில் மாபெரும் இரத்த தான நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது .
மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய விளையாட்டுக்கழககத்தின்   உயிர் நீத்த  அங்கத்தவர் தனபாலன் அவர்களின் ஞாபகார்த்தமாகவும்,கழகத்தில் இருந்து உயிர் நீத்த ஏனைய  அங்கத்தவர்களின் ஞாபகார்த்தமாகவும் இவ் இரத்த தான நிகழ்வு நடத்தப்பட்டது.
தற்போதய கால  கட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளினாலும்,அதிகரித்துள்ள  சத்திர  சிகிச்சைகள் காரணமாகவும்  அதிக அதிகளவான  குருதி அவசியமாக உள்ளது . இதனால் மட்டக்களப்பு மாவட்டவைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகிறது இத்தனையும்   கருத்தில் கொண்டு இந்த இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
பெருமளவிலான இளைஞர் யுவதிகள் இதில் கலந்து கொண்டு தாமாக முன் வந்து குருதிக்கொடை வழங்கினர்
  இரத்த தான நிகழ்வில் பணியாற்றிய வைத்திய அதிகாரிகளுக்கும் ,குருதிக்கொடை வழங்கியவர்களுக்கும்    விளையாட்டுக்கழக தலைவர் சாண்டோ இராஜரெத்தினம்  அவர்கள் தனது நன்றியை தெரிவித்தார்.
SIVAKUMAR